தொழில்நுட்ப கோளாறு காரணமாக மதுரையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சிங்கப்பூர் செல்ல வேண்டிய விமானம், சுமார் 14 மணி நேரம் தாமதமாக திங்கள்கிழமை மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு சென்றது.
மதுரை விமான நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கு சிங்கப்பூருக்கு செல்ல பயணிகள் விமானம் தயார் நிலையில் இருந்தது. அதில் 70 பயணிகள் சிங்கப்பூருக்கு செல்ல இருந்தனர்.
இந்நிலையில் விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அதையடுத்து பயணிகள் அனைவரையும் விமான நிறுவனம் சார்பில் தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர், திங்கள்கிழமை விமானத்தின் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு மதியம் 2.30 மணிக்கு பயணிகளுடன் சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றது.