கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் உரிய முடிவு: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் உரிய முடிவு: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
 காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில், வரும் நாடாளுமன்ற தேர்தல் பணிக்கான பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் செங்கல்பட்டை அடுத்த சிங்கபெருமாள் கோயிலில் புதன்கிழமை நடைபெற்றது.
 கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாவட்டம் முழுவதும் தேர்தல் கமிட்டி பொறுப்பாளர்கள் சுறுசுறுப்புடன் செயல்பட்டு, பூத் கமிட்டி அமைக்கும் பணியினை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசின் சாதனைகளையும், மக்கள் பயன்பெறும் நல்ல திட்டங்களையும் எடுத்துக் கூற வேண்டும் என்றார்.
 கூட்டத்தில், மாவட்டம், நகரம், ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 கூட்டத்தின் முடிவில் மத்திய அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜயப்பன் கோயிலில் சீசன் தொடங்கிய இந்த நேரத்தில் பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.
 இந்நிலையில், கேரள அரசு இடையூறு விளைவித்து, பக்தர்களை கண்டிக்கும் வகையில் நடந்து கொள்வதை நிறுத்த வேண்டும், கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் முடிவெடுக்கப்படும், மத்திய அரசு தமிழகத்துக்கு எந்த திட்டத்தைக் கொண்டு வந்தாலும் அதை தடுப்பதற்கென்றே ஒரு கூட்டம் அலைந்து கொண்டிருக்கிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com