கூவம், அடையாறு ஆற்றை பராமரிக்காத தமிழக அரசுக்கு விதிக்கப்பட்ட அபராதத்துக்குத் தடை

கூவம், அடையாறு ஆறுகளை பராமரிக்காதது தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விதித்த அபராதத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது
கூவம், அடையாறு ஆற்றை பராமரிக்காத தமிழக அரசுக்கு விதிக்கப்பட்ட அபராதத்துக்குத் தடை


சென்னை: கூவம், அடையாறு ஆறுகளை பராமரிக்காதது தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விதித்த அபராதத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கடந்த அக்டோபர 31ம் தேதி தமிழக அரசுக்கு ரூ. 2 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அளித்த உத்தரவை எதிர்த்து தமிழக பொதுப்பணித் துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அப்போது, கூவம், அடையாறு ஆறுகளை சீரமைப்பது தொடர்பாக முறையான ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை என்பதால் ரூ.2  கோடி அபராதம் விதித்தது தவறானது என்று கூறி, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விதித்த அபராதத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com