அம்மா உணவகத்தில் சாப்பிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உணவருந்தினர்.
அம்மா உணவகத்தில் சாப்பிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உணவருந்தினர்.

சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன இருதய சிகிச்சை அரங்கம் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு கட்டப்பட்டுள்ளது. இதனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். 

தொடர்ந்து மருத்துவமனை வாயிலில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படத்திற்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

பின்னர் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் விஜய்பாஸ்கர், வேலுமணி, காமராஜ் உள்ளிட்டோர் உணவருந்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com