அரையாண்டு தேர்வு டிச.10-இல் தொடக்கம்

பள்ளி அரையாண்டு தேர்வுக்கான கால அட்டவணையை பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் டிசம்பர்


பள்ளி அரையாண்டு தேர்வுக்கான கால அட்டவணையை பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் 10-ஆம் தேதி தொடங்க உள்ளன.
இந்தத் தேர்வுகள் அனைத்தும் காலை 10.15 மணி முதல் 12.45 மணி வரை நடத்தப்பட உள்ளன. முன்னதாக காலை 10 மணி முதல் 10.10 மணி வரை மாணவர்கள் கேள்வித் தாளை படித்துப் பார்க்க அவகாசம் அளிக்கப்படும். பின்னர் விடைத் தாளின் முன்பக்க விவரங்களை நிரப்புவதற்கு காலை 10.10 மணி முதல் 10.15 மணி வரை 5 நிமிஷம் கால அவகாசம் அளிக்கப்படும். இந்த எழுத்துத் தேர்வுகளுக்கு முன்பாக செய்முறைத் தேர்வுகள் நடத்தப்பட்டு விடும் எனவும் பள்ளி கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com