கஜா புயல் காரணமாக இன்று ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் வரும் 22ஆம் தேதி நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கஜா புயலின் வேகமானது 14 கிமீட்டரிலிருந்து 25 கிமீட்டராக அதிகரித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் கடலூர் மற்றும் பாம்பன் இடையே இன்று இரவு 11.30 மணியளவில் கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் கஜா புயல் காரணமாக, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் உறுப்பு கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டன.
தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெவிக்கப்பட்ட நிலையில் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் வரும் 22ம் தேதி நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.