கஜா புயல் எதிரொலி: பட்டுக்கோட்டை அருகே வீட்டின் சுவர் இடிந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

கஜா புயல் காரணமாக பட்டுக்கோட்டை அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கஜா புயல் எதிரொலி: பட்டுக்கோட்டை அருகே வீட்டின் சுவர் இடிந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

கஜா புயல் காரணமாக பட்டுக்கோட்டை அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

வங்கக்கடலில் உருவாகி கடந்த ஒரு வாரமாக மிரட்டி வந்த கஜா புயல் வெள்ளிக்கிழமை அதிகாலை நாகப்பட்டினத்துக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே தீவிரப் புயலாகக் கரையைக் கடக்கத் தொடங்கியது. புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் மிக பலத்த மழை பெய்தது. 

இந்நிலையில் கஜா புயல் காரணமாக பட்டுக்கோட்டை அருகே சிவகொல்லையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதையடுத்து அங்கு விரைந்த மீட்புக்குழுவினர் அவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com