கஜா புயலைத் தொடர்ந்து டாப்சிலிப்பில் வியாழக்கிழமை இரவு முதல் மழை பெய்து வருவதால் யானை சவாரி தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், டாப்சிலிப்பிற்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் அதிக அளவில் வந்துசெல்கின்றனர். அங்கு நேற்று (வியாழக்கிழமை) இரவு முதல் தொடர் மழை பெய்துவருவதால் தற்காலிகமாக யானை சவாரி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
யானை சவாரிக்கு டாப்சிலிப் முகாம் யானைகளான மாரியப்பன், கல்பனா, பரணி, வெங்கடேஷ் உட்பட 5 யானைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் 4 பேர் பயணம் செய்ய ரூ.600 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.