சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஆயிரம் கிலோ நாய்க்கறி சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
ரகசிய தகவலின் அடிப்படையில், சென்னைக்கு ஜோத்பூரில் இருந்து ரயிலில் கொண்டுவரப்பட்ட 1,000 கிலோ நாய்க்கறி எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது சென்னையில் செயல்பட்டு வரும் பிரபல இறைச்சிக் கடையை நடத்தி வரும் கணேஷ் என்பவருக்கு வந்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர் சென்னையில் உள்ள பல தனியார் உணவகங்களுக்கு இறைச்சி விற்பனை செய்து வருபவர் என்று தெரியவந்துள்ளது.