யாரும் எதிர்பாராதவகையில் சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் திடீர் மழை

கஜா புயலின் தாக்கம் பெரிய அளவில் சென்னையைத் தாக்காத நிலையில் இன்று காலை வழக்கம் போல சூரியன் தனது பணியைப் பார்க்க செவ்வனே வந்துவிட்டார்.
யாரும் எதிர்பாராதவகையில் சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் திடீர் மழை


கஜா புயலின் தாக்கம் பெரிய அளவில் சென்னையைத் தாக்காத நிலையில் இன்று காலை வழக்கம் போல சூரியன் தனது பணியைப் பார்க்க செவ்வனே வந்துவிட்டார்.

11 மணிக்குக் கூட சூரியன் ஜம்மென்று தனது வேலையைப் பார்த்துக் கொண்டிருக்க அதனை சட்டை செய்யாமல் சென்னையின் புறநகர்ப் பகுதிகளை ஒரு கரு மேகம் சூழ்ந்து கொண்டது. சில பகுதிகளில் கரு மேகம் தலையைக் காட்டிவிட்டு, வாலை சுருட்டிக் கொண்டு ஓட, சில பகுதிகளில் மட்டும் பெரிய மனது வைத்து மழையைப் பொழிந்தது.

சென்னையின் புறநகர்ப் பகுதிகளான பழைய பெருங்களத்தூர், மாங்காடு, தாம்பரம், ஐயப்பன்தாங்கல், போரூர், கிழக்கு தாம்பரம், சேலையூர், காட்டுப்பாக்கம், கேளம்பாக்கம், வண்டலூர், திருவேற்காடு, குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை மழை பெய்திருக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com