கஜா புயல் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் பெட்ரோல், டீசல் தேவைக்கு உதவி எண்களை அறிவித்துள்ளது இந்தியன் ஆயில் பெட்ரோலிய நிறுவனம்.
புயலின் கோரத்தாண்டவத்தால் தமிழத்தில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் சீரழிந்துள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
இந்நிலையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, காரைக்காலில் பாரத் பெட்ரோலிய பங்க்குகள் முழுமையாக செயல்படுகிறது. 100 சதவீத பங்க்குகள் செயல்படுவதாக பாரத் பெட்ரோலிய நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தங்களின் தேவைக்கு சிரமப்பட்டு வரும் நிலையில், இந்திய ஆயில் பெட்ரோலிய நிறுவனம் தன் பங்கீடாக 4 மாவட்டங்களுக்கு உதவிடும் வகையில் உதவி எண்களை அறிவித்துள்ளது. இந்த 4 மாவட்டங்களில் பெட்ரோல், டீசல் தேவைக்கு உதவி எண்களை அறிவித்துள்ளது.
தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டம்: ஷெரில் - 94426 13008, நாகப்பட்டினம் மாவட்ட மக்கள் ஷெரீப் - 94433 89219, புதுக்கோட்டை மாவட்ட மக்கள் ராஜ்குமார் - 94448 30943 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.