கஜா புயல் நிவாரணப் பணிக்கு திமுக சார்பில் ரூ.1 கோடி நிதி: ஸ்டாலின்

கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களில் இருந்து மக்களை மீட்டெடுக்க உதவிடும் வகையில், திமுக அறக்கட்டளையில் இருந்து ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கப்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 
கஜா புயல் நிவாரணப் பணிக்கு திமுக சார்பில் ரூ.1 கோடி நிதி: ஸ்டாலின்

கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களில் இருந்து மக்களை மீட்டெடுக்க உதவிடும் வகையில், திமுக அறக்கட்டளையில் இருந்து ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கப்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

"கஜா புயல் மற்றும் கனமழையால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விவசாயிகள், மீனவர், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் பெருந்துயரத்திற்கும், மிகக் கடுமையான சேதத்திற்கும் உள்ளாகியிருக்கிறார்கள். 

புயலும் மழையும் பொதுமக்களின் வாழ்க்கை நிலையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டிருக்கிறது. வரலாறு காணாத சேதங்களில் இருந்து மக்களை மீட்டெடுக்கத் தேவையான நிவாரணம், மறு சீரமைப்பு மற்றும் மறு கட்டமைப்புப் பணிகளுக்கு உதவிடும் வகையில், திராவிட முன்னேற்றக் கழக அறக்கட்டளையிலிருந்து ஒரு கோடி ரூபாயும், கழக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளமும் நிதியுதவியாக அளிக்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com