கஜா புயல்: இன்றைய பள்ளி விடுமுறை மற்றும் தேர்வு ஒத்திவைப்பு விவரம்

கஜா புயல் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதையொட்டி இன்று (திங்கள்கிழமை) குறிப்பிட்ட சில இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறையும், ஒரு சில தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
கஜா புயல்: இன்றைய பள்ளி விடுமுறை மற்றும் தேர்வு ஒத்திவைப்பு விவரம்


கஜா புயல் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதையொட்டி இன்று (திங்கள்கிழமை) குறிப்பிட்ட சில இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறையும், ஒரு சில தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

அதன் விவரம்:

நாகை வருவாய்க் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு புயல் சேத சீரமைப்புப் பணிகளையொட்டி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

மயிலாடுதுறை வருவாய்க் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு, அந்தந்த பகுதிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கேற்ப, பள்ளித் தலைமை ஆசிரியர்கள் விடுமுறை அளிப்பது குறித்து முடிவடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புயல் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு, பட்டுக்கோட்ட கல்வி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.  

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் முழுவதுமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

கொடைக்கானல் வட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பொதுப்பணித்துறையுடன் இணைந்து சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்வுகள் ஒத்திவைப்பு:

கஜா புயல் அறிவிப்பைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக இணைப்பு பொறியியல் கல்லூரிகளுக்கு கடந்த வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நடத்தப்பட இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், புயலால் பாதித்த பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்னும் இயல்பு நிலை திரும்பாததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த பருவத் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது. இத்தேர்வுகள் டிசம்பர் 15-ஆம் தேதிக்கு மாற்றிவைக்கப்பட்டுள்ளன. 

அதேசமயம், பல்கலைக்கழகத்தின் 4 துறைகளான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, கட்டடவியல் பள்ளி மற்றும் குரோம்பேட்டை எம்.ஐ.டி. ஆகியவற்றுக்கு வழக்கம்போல் இன்று தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும், இன்று நடைபெற இருந்த பாலிடெக்னிக் தேர்வுகளை வரும் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com