நாகை, திருவாரூரில் வேறொரு நாளில் முதல்வர் ஆய்வு செய்வார்: ஜெயக்குமார்

நாகை, திருவாரூரில் வேறொரு நாளில் முதல்வர் ஆய்வு செய்வார்: ஜெயக்குமார்

கஜா புயல் பாதித்த நாகை, திருவாரூரில் ஏற்பட்டிருக்கும் சேதங்களை வேறொரு நாளில் முதல்வர் ஆய்வு செய்வார் என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கஜா புயல் பாதித்த நாகை, திருவாரூரில் ஏற்பட்டிருக்கும் சேதங்களை வேறொரு நாளில் முதல்வர் ஆய்வு செய்வார் என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கன மழை பெய்து வருவதால் திருவாரூர், நாகையில் புயல் பாதிப்புகளை பார்வையிட இருந்த தமிழக முதல்வர் பழனிசாமியின் பயணம் ரத்து செய்யப்பட்டது.

சென்னையில் இருந்து இன்று காலை திருச்சிக்கு விமானம் மூலம் சென்ற முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இன்று காலை தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புயல் பாதித்த இடங்களை நேரில் பார்வையிட்டனர்.

விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தும், நிவாரண உதவிகளையும் பொதுமக்களுக்கு வழங்கினர்.

அங்கிருந்து புயல் கடுமையாக பாதித்த நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கும் சென்று சேத பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இப்பகுதிகளில் கன மழை பெய்து வருவதால், முதல்வரின் பயணம் ரத்து செய்யப்பட்டது.

கன மழை காரணமாக திருவாரூர், நாகை மாவட்டங்களுக்குச் சென்று கஜா புயல் பாதிப்புகளை நேரில் பார்வையிட முடியாமல் திருச்சி திரும்பினார் முதல்வர் பழனிசாமி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com