கஜா புயல் பாதிப்பில் திமுக அரசியல் செய்யவில்லை: துரைமுருகன்

கஜா புயல் பாதிப்பில் திமுக அரசியல் செய்யவில்லை என்று அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் கூறினார்.
கஜா புயல் பாதிப்பில் திமுக அரசியல் செய்யவில்லை: துரைமுருகன்


சென்னை: கஜா புயல் பாதிப்பில் திமுக அரசியல் செய்யவில்லை என்று அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் கூறினார்.

தமிழக முதல்வரை நேரில் சந்தித்து கஜா புயல் நிவாரணப் பணிக்காக திமுக சார்பில் ரூ.1 கோடியை துரைமுருகன் அளித்தார். 

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கஜா புயல் பாதித்த பகுதிகளை முதன் முதலாக ஸ்டாலின்தான் சென்று பார்த்து வந்தார். அங்கு நிலைமை படுமோசமாக இருப்பதாகத் தெரிவித்தார். எனவே திமுக சார்பில் அம்மாவட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு உறுதிணையாக ரூ.1 கோடி அளிக்கப்படும் என்று அறிவித்தார்.

அந்த ஒரு கோடி ரூபாயை முதல்வரிடம் இன்று நேரில் சந்தித்து காசோலையாக அளித்துள்ளோம் என்று கூறினார்.

புயல் பாதிப்புக்கான நிவாரணப் பணிகளில் எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்கவில்லை என்று முதல்வர் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்பதற்காக நிவாரண நிதி தந்துள்ளோம். எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ஒருமாத ஊதியத்தை அளிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மாவட்டச் செயலர்கள் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகளைச் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். புயல் பாதிப்பில் திமுக அரசியல் செய்யவில்லை என்று துரைமுருகன் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com