புதுச்சேரி: புதுச்சேரியில் கன மழை பெய்து வருவதையடுத்து பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. நாளையும் கன மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பள்ளி மாணவ, மாணவிகளின் பாதுகாப்புக் கருதி நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்துள்ளது பள்ளிக் கல்வித் துறை.