கஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு வெள்ளியன்று தமிழகம் வருகை 

கஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு வெள்ளியன்று தமிழகம் வருகை தரவுவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
கஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு வெள்ளியன்று தமிழகம் வருகை 

புது தில்லி: கஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு வெள்ளியன்று தமிழகம் வருகை தரவுவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை கஜா புயல் கரையைக் கடந்தது. அப்போது, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், ராமநாதபுரம், திருச்சி, சிவகங்கை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பலத்த காற்று, கனமழையால் பாதிப்புக்கு உள்ளாகின. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தமிழக அரசு மீட்புப் பணிகளையும், நிவாரணப் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி  முதல்வர் பன்னீர்செல்வம் இருவரும் செவ்வாய்க்கிழமை ஹெலிகாப்டர் மூலம் நேரில் பார்வையிட்டார். 

இதைத் தொடர்ந்து, புயல் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு நிவாரண நிதி கோருவதற்காக பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக, முதல்வர் விமானம் மூலம் சென்னையில் இருந்து புதன்கிழமை இரவு 8.50 மணியளவில் தில்லி சென்றந்தார். 

வியாழன் காலை 9.45 மணியளவில்தில்லி லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நேரில் சந்தித்தார். அப்போது, கஜா புயல் பாதிப்பு, சேதம் குறித்து எடுத்துக் கூறி, தமிழகத்திற்கு தேவையான புயல் நிவாரண நிதியை வழங்கக் கோரி வலியுறுத்தினார். 

இது தொடர்பாக தமிழக வருவாய் மற்றும் நிதித் துறை தயாரித்துள்ள அறிக்கையையும் பிரதமரிடம் அளித்த முதல்வர் பழனிசாமி, கஜா புயல் பாதிப்புகளை சீரமைக்க நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி அளிக்கவும், புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்திய குழுவை அனுப்புமாறு கோரினார். 

புயல் பாதிப்பை சரி செய்ய தமிழக அரசுக்கு விரைவாக நிதி ஒதுக்கவும், புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

இந்நிலையில் கஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு வெள்ளியன்று தமிழகம் வருகை தரவுவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 

மத்திய உள்துறை சார்பில் அனுப்பப்பட உள்ள நான்கு பேர் கொண்ட குழுவிற்கு  மத்திய உள்துறை இணைச் செயலாளர் பிபின் பிஹாரி மாலிக் தலைமை வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெள்ளிக்கிழமை மாலை தமிழகம் வரவுள்ள இக்குழுவானது சனிக்கிழமை காலை முதல்வர் பழனிசாமியை, தலைமைச்செயலகத்தில் சந்திக்க உள்ளது. 

அதற்கு பிறகே கஜா புயல் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளை பார்வையிடுவதற்காக அக்குழு புறப்பட்டுச் செல்லும் என்று தெரிவிக்கபட்டுள்ளது 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com