சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு கன மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, வியாழக்கிழமை மாலை 4.30 மணி வரை தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கன மழை நீடிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு குறித்த தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மேலும் கிருஷ்ணகிரி, நாகை, விழுப்புரம், தருமபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோவை, கடலூர், திருவாரூர், புதுக்கோட்டை, வேலூர், திருவண்ணாமலை, ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் 4.30 மணி வரை மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.