தேனி: 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற மூவருக்கு தூக்கு தண்டனை

தேனி மாவட்டத்தில் 10 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தேனி: 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற மூவருக்கு தூக்கு தண்டனை


தேனி: தேனி மாவட்டத்தில் 10 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சின்னமனூர் அருகே காமாட்சிபுரத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் மாயமானார். அவரது உடல் கிணற்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இதில் அந்த ஊரைச் சேர்ந்த சுந்தர்ராஜ், ரூபின், குமரேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி ஊர் மக்கள் நடத்திய போராட்டம் காரணமாக, அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. கடந்த 4 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் அவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்து வந்த தேனி மாவட்ட மகிளா நீதிமன்றம், குற்றவாளிகளான சுந்தர்ராஜ், ரூபின், குமரேசன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்துள்ளது.

தீர்ப்பை அளித்த நீதிபதி திலகம், ஒவ்வொரு குற்றத்துக்கும் தனித்தனியே தண்டனையை அறிவித்தார். பலாத்காரம் செய்த குற்றத்துக்கு, மூவரும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தார். சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற குற்றத்துக்கு மூவருக்கும் தூக்கு தண்டனை விதித்ததோடு, அரசு சார்பாக உயிரிழந்த சிறுமியின் தாயாருக்கு கருணைத் தொகை வழங்க வேணடும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com