மதுரை: மக்கள் ஆதரவு இருப்பதால் எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுகவே வெற்றி பெறும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் குறித்து மதுரையில் இன்று முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, வடகிழக்குப் பருவ மழையை எதிர்கொள்ள தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதிக மழை பெய்தால் வெள்ளம் வரும் என்பது இயற்கை. வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், கருத்துத் தெரிவிக்கலாம்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்பதில் எந்த ஐயமும் தேவையில்லை.
தற்போதைய நிலையில் நாங்கள் தனியாக உள்ளோம். தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து முடிவெடுக்க முடியும்.
திருப்பரங்குன்றம் தேர்தலை சந்திப்பதற்கான ஆயத்தப் பணிகளை அதிமுக தொடங்கியுள்ளது என்று முதல்வர் கூறினார்.