அதிக மாணவர் சேர்க்கை: 1,700 பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ நோட்டீஸ்?

விதிகளை மீறி அதிக மாணவர்களை சேர்த்திருக்கும் 1,700 பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.


விதிகளை மீறி அதிக மாணவர்களை சேர்த்திருக்கும் 1,700 பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் ஒரு வகுப்புக்கான பிரிவுகளில் 40 மாணவர்கள் மட்டுமே பயில வேண்டும் என்ற விதி உள்ளது. இந்த நிலையில் சிபிஎஸ்இ பள்ளி விவரங்களைப் பதிவு செய்யும் ஆன்லைன் நடைமுறை மூலம் கணக்கிட்டதில், நாடு முழுவதும் 1, 700 பள்ளிகளில் ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில், ஒரு வகுப்புக்கான பிரிவுகளில் 40-க்கும் அதிகமான மாணவர்கள் பயில்வது கண்டறியப்பட்டது. இந்தப் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும், விதிகளை மீறிய பள்ளிகளுக்கான அங்கீகாரத்தை ரத்து செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com