நாட்டில் ஊழலற்ற நேர்மையான ஆட்சி தரக்கூடிய ஒரே கட்சி பாஜக தான்: பொன்.ராதாகிருஷ்ணன்

சதுரங்க விளையாட்டில் நம் நாட்டை சேர்ந்தவர்கள் மிக பெரிய சாதனையை படைத்து உள்ளதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நாட்டில் ஊழலற்ற நேர்மையான ஆட்சி தரக்கூடிய ஒரே கட்சி பாஜக தான்: பொன்.ராதாகிருஷ்ணன்

இதுதொடர்பாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாட்டில் ஊழலற்ற நேர்மையான ஆட்சியை தரக்கூடிய ஒரே கட்சி பாரதிய ஜனதாதான். ஊழலற்ற, நேர்மையான, தூய்மையான அரசு தமிழகத்தில் அமைய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். பாஜக ஆளும் அனைத்து மாநிலங்களும் வளர்ச்சி அடைந்து வருகின்றன. 

சதுரங்க விளையாட்டில் நம் நாட்டை சேர்ந்தவர்கள் மிக பெரிய சாதனையை படைத்து இருக்கிறார்கள். பிரக்ஞானந்தா மிகப்பெரிய சாதனை படைத்து உலகம் முழுவதும் பாராட்டுக்களை பெற்று இருக்கிறார். 12 வயதுக்குட்பட்டோருக்கான சதுரங்க விளையாட்டு போட்டியில் வைஷாலி பங்கேற்று சாதனை படைத்துள்ளதாக தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com