மத்திய அரசின் திட்டங்கள்: தூத்துக்குடியில் ஆளுநர் ஆய்வு

தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மத்திய அரசின் திட்டங்கள்: தூத்துக்குடியில் ஆளுநர் ஆய்வு

தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
 தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். "தூய்மை இந்தியா' இயக்கம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய அவர், மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தூத்துக்குடி அரசினர் விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்டத்துக்காக மத்திய அரசு ஒதுக்கிய திட்டங்கள் மற்றும் அவற்றின் தற்போதைய நிலை குறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் கேட்டறிந்தார்.
 இதையடுத்து, மத்திய அரசின் எந்தெந்த திட்டங்கள் எல்லாம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன, அந்தப் பணிகளின் தற்போதைய நிலை, மத்திய அரசு அறிவித்த காலக்கெடுவுக்குள் முடிக்கப்பட்ட திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சியர் புள்ளிவிவரங்களுடன் விளக்கம் அளித்தார்.
 மத்திய அரசு தூத்துக்குடி மாவட்டத்துக்கு ஒதுக்கிய நிதி முழுமையாக பயன்படுத்தப்படுகிறதா? மத்திய அரசு திட்டங்களின் செயல்பாடுகளை அதிகாரிகள் உரிய முறையில் நேரடியாக ஆய்வு மேற்கொள்கிறார்களா என கேட்டறிந்த ஆளுநர், அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com