"அனைத்து வாக்குப் பதிவு இயந்திரங்களிலும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் வசதி'

யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் வசதி கொண்ட நவீன வாக்குப்பதிவு இயந்திரங்கள் தமிழகம் முழுவதும் தயார் நிலையில் உள்ளன என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறினார்.

யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் வசதி கொண்ட நவீன வாக்குப்பதிவு இயந்திரங்கள் தமிழகம் முழுவதும் தயார் நிலையில் உள்ளன என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறினார்.
 திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை ஆய்வு செய்ய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ சனிக்கிழமை திருவண்ணாமலைக்கு வந்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே.எஸ்.கந்தசாமி மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் சத்யபிரத சாஹூ பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு நடத்தினார்.
 பின்னர், சத்யபிரத சாஹூ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
 தமிழகம் முழுவதும் நவீன வசதியுடன் கூடிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தலுக்கு தயார் நிலையில் உள்ளன. இந்த இயந்திரங்களில் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ள முடியும்.
 இனிவரும் தேர்தல்களில் இந்த நவீன வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். ஒரே வாக்காளர் பல்வேறு முகவரியில் பதிவு செய்து பெற்றுள்ள வாக்காளர் அடையாள அட்டைகளை கண்டறிந்து, நீக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.
 திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை ஆய்வு செய்ய வந்துள்ளேன். இங்கு, புதிய இயந்திரங்களின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்து முடிக்கப்பட்டுள்ளது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com