சென்னை: ஆயுத பூஜையை ஒட்டி புதன் இரவு முதல் 770 கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாளை ஆயுத பூஜை, நாளை மறுநாள் விஜயதசமி மற்றும் வார இறுதி ஆகியவற்றை முன்னிட்டு, புதன்கிழமை இரவில் இருந்து கோயம்பேட்டில் இருந்து சொந்த ஊருக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படும்.
வழக்கமாக நாள் ஒன்றுக்கு 2775 பேருந்துகள் இயக்கப்படும் தருணத்தில் ,வெளியூர் செல்பவர்களின் வசதிக்காக, புதன் இரவு முதல் 770 கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழநாடு அரசு அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இவை ஏற்கனவே முன்பதிவு செய்தோருக்கு இயக்கப்படும் பேருந்துகள் அல்லாமல் கூடுதலாக இயக்கப்படுவது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.