ஜெயலலிதா மரண வழக்கு: ராமமோகன ராவ் ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது.
ஜெயலலிதா மரண வழக்கு: ராமமோகன ராவ் ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. 

இந்த ஆணையத்தில் சசிகலாவின் உறவினர்கள், முன்னாள் தலைமைச் செயலர்கள், காவல்துறை அதிகாரிகள், அரசு மருத்துவர்கள், ஜெயலலிதாவின் உதவியாளர்கள், அவரது வீட்டில் பணிபுரிந்தவர்கள் என இதுவரை 25 -க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரணை ஆணையத்தில் சசிகலா அண்மையில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்.

இந்நிலையில், ஜெயலலிதா மரணம்தொடர்பான விசாரணைக்கு அக்டோபர் 24-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுாறு முன்னாள் தலைமைச் செயலர் ராமமோகன ராவ்-க்கு ஆறுமுகசாமி விசாரனை ஆணையம் புதன்கிழமை மீண்டும் சம்மன் அனுப்பியது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com