தமிழக காவல்துறையில் 39 ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

தமிழக காவல்துறையில் 39 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி தே.க.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக காவல்துறையில் 39 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி தே.க.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக காவல்துறையில் நிர்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனமாக இருந்ததாலும் அவ்வப்போது அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, தமிழக காவல்துறையில் 39 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி தே.க.ராஜேந்திரன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
இதில் முக்கியமாக தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ஆர்.விநாயகம் சென்னைக்கும், கோடம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் பி.பாலசுப்பிரமணியன் மத்திய மண்டலத்துக்கும், நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஆர்.காமாட்சி சென்னைக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள 39 காவல் ஆய்வாளர்களும் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பார்கள் என காவல் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com