பருவமழையால் தமிழகத்தில் 155 இடங்கள் அதிகம் பாதிக்கப்படும்: அமைச்சர் உதயகுமார்

காற்று மண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம், புதுச்சேரியில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.
பருவமழையால் தமிழகத்தில் 155 இடங்கள் அதிகம் பாதிக்கப்படும்: அமைச்சர் உதயகுமார்

கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டி வந்த நிலையில் வங்கக் கடலில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளல் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது.  

அண்ணா சாலை, சேப்பாக்கம், வேளச்சேரி, திருவான்மியூர், அடையாறு, பரங்கிமலை, மீனம்பாக்கம், ஆலந்தூர், ஆதம்பாக்கம், பொன்னேரி, சோழவரம், மீஞ்சூர், செங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், காற்று மண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம், புதுச்சேரியில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான நிலை உருவாகி வருகிறது. எனவே அக்டோபர் 20-ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, திருவள்ளூர் பேரிடர் மேலாண்மை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயகுமார், பருவமழையால் தமிழகத்தில் 155 இடங்கள் அதிகம் பாதிக்கும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை மீட்க மீட்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதனிடையே, கும்மிடிப்பூண்டி அருகே ராஜபாளையத்தில் வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்த மகேஸ்வரி (55) மற்றும் உளுந்தூர்பேட்டை அருகே
மாரனோடையில்  ரெஜினாமேரி (40) ஆகியோர் இடி தாக்கி உயிரிழந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com