தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயிலில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் நேரில் ஆய்வு செய்து வருகிறார்கள்.
சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினருடன், தொல்லியல் துறை அதிகாரிகளும் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சை பெரிய கோயிலில் உள்ள 41 ஐம்பொன் சிலைகளையும் அவர்கள் நேரில் பார்த்து அவற்றின் தொன்மை நிலை குறித்து ஆய்வு செய்கிறார்கள். ஏற்கனவே 2 முறை ஆய்வு நடைபெற்ற நிலையில், இன்று 3வது கட்டமாக ஆய்வு நடைபெற்று வருகிறது.