மதுரை: வாடிப்பட்டி அருகே கார் மோதி குழந்தை உட்பட 4 பேர் உயிரிழப்பு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே வடுகப்பட்டியில் பேருந்துக்காக சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது  கார் மோதியதில் 7 மாதக் குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
மதுரை: வாடிப்பட்டி அருகே கார் மோதி குழந்தை உட்பட 4 பேர் உயிரிழப்பு


மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே வடுகப்பட்டியில் பேருந்துக்காக சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது  கார் மோதியதில் 7 மாதக் குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த லட்சுமி, மரத்தி, வசந்தி, அத்விக் (குழந்தை) ஆகியோர் வடுகப்பட்டியில் பேருந்துக்காக சாலையோரம் நின்றிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த காரின் டயர் வெடித்ததால், எதிர்பாராதவிதமாக கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது பயங்கரமாக மோதியதில், நிகழ்விடத்திலேயே 7 மாதக் குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த காவல்துறையினர், ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com