சினிமா பிரபலங்களை கண்காணிக்கக் குழு: தென்னிந்திய நடிகர் சங்கம்

திரைப்படம் மற்றும் நாடக படப்பிடிப்புத் தளங்களில் கலைஞர்களை கண்காணிக்க குழு அமைக்கப்படும் என தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
சினிமா பிரபலங்களை கண்காணிக்கக் குழு: தென்னிந்திய நடிகர் சங்கம்

திரைப்படம் மற்றும் நாடக படப்பிடிப்புத் தளங்களில் கலைஞர்களை கண்காணிக்க குழு அமைக்கப்படும் என தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
 அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் மீது பாலியல் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இவை, பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. இதுதொடர்பாக வரும் புகார்கள் குறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கண்காணிப்புக் குழு அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
 இந்த நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
 திரைப்படம் மற்றும் நாடக படப்பிடிப்புத் தளங்களில் கலைஞர்கள் பாலின பாகுபாடு இல்லாமலும், மன அழுத்தம், அச்சுறுத்தல் இன்றியும் சுயமரியாதையுடன் தங்கள் கலையைச் செயல்படுத்தும் சூழலை தக்கவைத்து கொள்வதில் தென்னிந்திய நடிகர் சங்கம் தீவிர கவனம் செலுத்தும். அதனை செயல்படுத்திக் கண்காணிக்க குழு ஒன்றும் அமைக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com