புது தில்லி: தமிழக முதல்வருக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார் வழக்கை சிபிஐக்கு மாற்றியதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீடு செய்துள்ளது.
நெடுஞ்சாலைத் துறைப் பணிகளுக்கான டெண்டர்களை ஒதுக்கியதில் முறைகேடு நடைபெற்றதாக திமுக சார்பில் வழக்குத் தொடர்ந்தது.
தமிழக முதல்வர் மீதான புகார் என்பதால் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.