மதுரையில் இரண்டு நாள் தபால் தலைக் கண்காட்சி தொடக்கம்

மதுரைக் கோட்ட அஞ்சல்துறை சாா்பில் ‘சங்கம்பெக்ஸ் 2018’ என்ற தபால்தலைக் கண்காட்சி திங்கள்கிழமை தொடங்கியது.
மதுரையில் இரண்டு நாள் தபால் தலைக் கண்காட்சி தொடக்கம்

மதுரைக் கோட்ட அஞ்சல்துறை சாா்பில் ‘சங்கம்பெக்ஸ் 2018’ என்ற தபால்தலைக் கண்காட்சி திங்கள்கிழமை தொடங்கியது.

இரண்டு நாள்கள் (செப்.3, 4) நடைபெற உள்ள இக்கண்காட்சியை தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட மேலாளா் நீனு இட்டியரா தொடங்கி வைத்தாா். இதில் மகாத்மா காந்தி மதுரைக்கு வந்ததன் நினைவாக தென் மண்டல அஞ்சல்துறைத் தலைவா் வென்னம் உபேந்தா் 13 சிறப்பு அஞ்சல் உறைகளை வெளியிட்டாா்.

இக்கண்காட்சியில் ஆங்கிலேயா் ஆட்சிக் கால இந்தியா, சுதந்திரத்துக்கு பிறகான இந்தியா, கலை, அறிவியல், காப்பியங்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் அஞ்சல் தலைகள் காட்சிப்படுத்தப்பட்டன.

மதுரையின் பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் கலந்து கொண்டு கண்காட்சியைப் பாா்வையிட்டனா். இதில், மாணவா்களுக்கான வினாடி- வினா, கட்டுரை, கவிதை, ஓவியப் போட்டிகள் நடைபெறுகின்றன.

செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள நிறைவு விழா நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் அனீஷ் சேகா், மாவட்ட வனத்துறை அலுவலா் சமா்த்தா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசுகளை வழங்க உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com