மேகதாது அணை கட்டுவது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் தடுப்பணைக் கட்ட கர்நாடக அரசு முயற்சிப்பது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
மேகதாது அணை கட்டுவது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது: பிரதமருக்கு முதல்வர் கடிதம்


சென்னை: காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் தடுப்பணைக் கட்ட கர்நாடக அரசு முயற்சிப்பது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு முதல்வர் எழுதியிருக்கும் கடிதத்தில், காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு தடுப்பணைக் கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, மத்திய நீர்வளத்துறைக்கு, தடுப்பணை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த அறிக்கையையும் கர்நாடக அரசு தன்னிச்சையாகவே அனுப்பியுள்ளது.

கர்நாடக அரசு அனுப்பியிருக்கும் அறிக்கையை நீர்வளத்துறை பரிசீலிக்கக் கூடாது என்று அறிவுறுத்த வேண்டும் என தமிழக அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

காவிரியின் குறுக்கே மேகதாது அணை அமைப்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது என்றும் கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com