மாணவி சோபியா கனடாவில் மேற்படிப்பை தொடர, அரசு வழக்கை திரும்ப பெற வேண்டும் - ஸ்டாலின் டிவீட்

பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்ட மாணவி சோபியா கனடா சென்று மேற்படிப்பை தொடருவதற்கு, தமிழக அரசு அவர் மீது போடப்பட்ட வழக்கினை திரும்ப பெற வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
மாணவி சோபியா கனடாவில் மேற்படிப்பை தொடர, அரசு வழக்கை திரும்ப பெற வேண்டும் - ஸ்டாலின் டிவீட்

பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்ட மாணவி சோபியா கனடா சென்று மேற்படிப்பை தொடருவதற்கு, தமிழக அரசு அவர் மீது போடப்பட்ட வழக்கினை திரும்ப பெற வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் டிவிட்டரில் தெரிவித்துள்ளதாவது, 

"#பாசிசபாஜகஒழிக என்று முழக்கமிட்ட மாணவி சோபியாவின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ய தமிழக அரசு முயற்சிப்பது கண்டனத்துக்குரியது. நீதிமன்றமே நிபந்தனை விதிக்காத நிலையில், காவல்துறை ஆய்வாளர் பாஸ்போர்ட்டை சரண்டர் செய்யக்கோரி "சம்மன் அனுப்பி" மாணவியை பழிவாங்க துடிப்பது வேதனையளிக்கிறது!

மாணவி சோபியா கனடா சென்று மேற்படிப்பினை தொடர தமிழக அரசு அவர் மீது போடப்பட்ட வழக்கினை திரும்ப பெற வேண்டும். மேலும், “பொதுவாழ்வில் விமர்சனங்கள் ஆரோக்கியமானவை” என்பதை உணர்ந்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை அவர்களும் தான் அளித்த புகாரை திரும்ப பெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்!" என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com