ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து திங்கள்கிழமை காலை நொடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக அணைகளிலிருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி நொடிக்கு 7ஆயிரம் கன அடியாக இருந்தது.
திங்கள்கிழமை காலை 8 மணி நிலவரப்படி நொடிக்கு 8 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
மேலும் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வரும் பயணிகள் அருவியில் குளிக்க 61 -ஆவது நாளாக திங்கள்கிழமையும் தடை நீட்டிக்கப்பட்டிருந்தது.