கால்நடை மருத்துவப் படிப்பு: செப். 22-இல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு

கால்நடை மருத்துவப் படிப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு செப்டம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் இரண்டாம்கட்ட கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.


கால்நடை மருத்துவப் படிப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு செப்டம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் இரண்டாம்கட்ட கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தி: 
இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு (பி.வி.எஸ்சி.-ஏ.ஹெச்.) படிப்பில் காலியாக உள்ள இடங்களுக்கு செப்டம்பர் 22 -ஆம் தேதி இரண்டாம்கட்ட கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதேபோன்று பி.டெக். (இளநிலை கால்நடை தொழில்நுட்ப படிப்பு) படிப்பில் காலியாக உள்ள இடங்களுக்கு செப்டம்பர் 23 -ஆம் தேதி கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. 
சென்னை வேப்பேரியில் உள்ள சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி அண்ணா கலையரங்கில் நடைபெறும் இந்த கலந்தாய்வில் பங்கேற்கத் தகுதியுள்ள மாணவர்களின் விவரங்கள் பல்கலைக்கழகத்தின்www.tanuvas.ac.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 
அக். 3-இல் வகுப்புகள் தொடக்கம்: முதலாமாண்டு இளநிலை படிப்புகளுக்கான (பி.வி.எஸ்சி. -ஏ.ஹெச்., பி.டெக்) வகுப்புகள் அக்டோபர் 3 -ஆம் தேதி தொடங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com