அரசியல் நடத்தாமல் ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, பல ஆண்டு காலமாக சிறை தண்டனையை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் இன்னும் காலம் தாழ்த்தி அரசியல் நடத்தாமல், அவர்களுக்கு நல்ல தீர்ப்பு தரவேண்டும். ஆளுநர் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனத்தெரிவித்துள்ளார்.