அழகு நிலையத்தில் பெண் மீது தாக்குதல்: திமுக பிரமுகர் கைது

பெரம்பலூரில் செயல்பட்டு வரும் அழகு நிலையத்தில் பெண் மீது தாக்குதல் நடத்திய திமுக பிரமுகர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
அழகு நிலையத்தில் பெண் மீது தாக்குதல்: திமுக பிரமுகர் கைது

பெரம்பலூரில் செயல்பட்டு வரும் அழகு நிலையத்தில் பெண் மீது தாக்குதல் நடத்திய திமுக பிரமுகர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூரில் செயல்பட்டு வரும் அழகு நிலையத்தில் திமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார் அத்துமீறி அங்கிருந்த பெண் ஒருவரை சரமாரியாகத் தாக்கினார். அவரை தாக்கும் காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இந்த பதிவுகள் இணையத்தில் வைரலானது.  

இதையடுத்து தாக்கப்பட்டது பெண்னை தாக்கிய திமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று பெரம்பலூர் டிஎஸ்பி ரவீந்திரன் தெரிவித்தார்.

இந்நிலையில், திமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைத்து திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் நடவடிக்கை மேற்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com