பெண் மீது தாக்குதல்: முன்னாள் கவுன்சிலர் திமுகவிலிருந்து இடைநீக்கம்

பெரம்பலூரில் அழகு நிலையத்துக்குள் புகுந்து பெண்ணைத் தாக்கிய முன்னாள் கவுன்சிலர் இடைநீக்கம் செய்யப்படுவதாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.

பெரம்பலூரில் அழகு நிலையத்துக்குள் புகுந்து பெண்ணைத் தாக்கிய முன்னாள் கவுன்சிலர் இடைநீக்கம் செய்யப்படுவதாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியம், அன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக் குழு முன்னாள் உறுப்பினர் எஸ். செல்வகுமார். 
திமுகவின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு 
அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என்று அன்பழகன் கூறியுள்ளார். 
பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் இயங்கிய அழகுநிலையத்தில் புகுந்து அதன் உரிமையாளரான சத்யாவைக் செல்வகுமார் தாக்கிய காணொலி சமூக வலைதளங்களில் பரவியது. அதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை திமுக தலைமை எடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com