கருத்து சுதந்திரத்தை மீட்டெடுக்க வேண்டும்

ஜனநாயக உரிமை நாள் கடைப்பிடிக்கும் நிலையில், கருத்துச் சுதந்திரத்தை மீட்டெடுக்க அனைவரும் போராட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கருத்து சுதந்திரத்தை மீட்டெடுக்க வேண்டும்

ஜனநாயக உரிமை நாள் கடைப்பிடிக்கும் நிலையில், கருத்துச் சுதந்திரத்தை மீட்டெடுக்க அனைவரும் போராட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை தமது சுட்டுரையில் பதிவில் கூறியிருப்பது:
 சர்வதேச ஜனநாயக உரிமை நாளில் (செப்.15) அரசியலமைப்புச் சட்டம் நமக்கு அளித்துள்ள சுதந்திரத்தையும், உரிமைகளையும் பாதுகாக்க நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும்.
 சமூக ஆர்வலர்களை அடக்குவதற்கும், ஜனநாயக உரிமைகளை நீர்த்துப் போகச் செய்வதற்கும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கருத்துச் சுதந்திரத்தை மீட்டெடுப்பதற்கான போராட்ட உணர்வை அனைவரும் புதுப்பிக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com