சாத்தூர் அருகே மின்னல் தாக்கியதில் பெண் உள்பட மூவர் சாவு

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே மின்னல் தாக்கியதில் பெண் உள்பட 3 பேர் சனிக்கிழமை உயிரிழந்தனர்.
சாத்தூர் அருகே மின்னல் தாக்கியதில் பெண் உள்பட மூவர் சாவு

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே மின்னல் தாக்கியதில் பெண் உள்பட 3 பேர் சனிக்கிழமை உயிரிழந்தனர்.
 சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம்பண்ணை, வெம்பக்கோட்டை, சங்கரபாண்டியபுரம் பகுதிகளில் சனிக்கிழமை மாலை பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதில், ஆண்டியாபுரம் பகுதியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் மின்னல் தாக்கியதில், ஆலையின் சுவர் இடிந்து விழுந்தது.
 அப்போது, அங்கு மழைக்காக ஒதுங்கி நின்றுகொண்டிருந்த அத்தொழிற்சாலையின் காவலாளி, சங்கரபாண்டியபுரத்தைச் சேர்ந்த காளியப்பன் (70) இடிபாடுகளில் சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதையடுத்து அருகில் இருந்தவர்கள் வெம்பக்கோட்டை தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்புத்துறையினர் அங்கு வந்து, சடலத்தை மீட்டு, சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
 இதேபோல் சோலைபட்டி பகுதியை சேர்ந்தவர் குருவம்மாள் (45). இவர், சனிக்கிழமை, அப்பகுதியில் காட்டு வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில் குருவம்மாள் உயிரிழந்தார். இந்த இரு சம்பவங்கள் குறித்தும் ஏழாயிரம்பண்ணை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 மேலும் ஒருவர் சாவு: இதேபோல், செவல்பட்டியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில், துலக்கன்குறுச்சியை சேர்ந்த செல்வராஜ் (60), மேலாளராக பணியாற்றி வந்தார். சனிக்கிழமை மாலை பட்டாசு தொழிற்சாலையில் பணியாற்றி கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் செல்வராஜ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீஸார் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com