கார் ஓட்டுநர் ராஜாவை பேரவையில் இருந்து நீக்கி ஜெ.தீபா நடவடிக்கை

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையில் இருந்து கார் ஓட்டுநர் ராஜாவை நீக்குவதாக அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் தீபா அறிவித்துள்ளார். 
கார் ஓட்டுநர் ராஜாவை பேரவையில் இருந்து நீக்கி ஜெ.தீபா நடவடிக்கை

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையில் இருந்து கார் ஓட்டுநர் ராஜாவை நீக்குவதாக அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் தீபா அறிவித்துள்ளார். 

இதுகுறித்து தீபா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, 
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (ஜெ.தீபா) அணி மற்றும் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் கொள்கைக்கும், கோட்பாடுகளுக்கும், விதிமுறைகளுக்கும் மாறாக தொடர்ந்து கழகத்திற்கு களங்கத்தை விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் இன்று முதல் (17-09-2018) கழகத்தில் இருந்தும், பேரவையின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் A.V.ராஜா விடுவிக்கப்படுகிறார். 

எனவே அவருடன் கழக உறுப்பினர்கள் யாரும் கழக கட்டுப்பாட்டை மீறி எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com