என்ன கத்தினாலும் திமுக ஆட்சிக்கு வரப்போவதில்லை: அமைச்சர் ஜெயக்குமார்

என்ன கத்தினாலும் திமுக ஆட்சிக்கு வரப்போவதில்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
என்ன கத்தினாலும் திமுக ஆட்சிக்கு வரப்போவதில்லை: அமைச்சர் ஜெயக்குமார்

என்ன கத்தினாலும் திமுக ஆட்சிக்கு வரப்போவதில்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
திமுக தலைவர் விரக்தியின் உச்சத்தில் பேசுகிறார். பாடுபட்டு குத்தினாலும் பதர் அரிசியாவது இல்லை. அதுபோல் என்ன கத்தினாலும் திமுக ஆட்சிக்கு வரப்போவதில்லை. இதுதான் நிதர்சனமான உண்மை. 

தமிழகத்தில் தீவிரவாதம், மதவாதம், மொழிவாதம் தலைதூக்க விடமாட்டோம். தமிழக மக்களுக்கு யார் மதவாதிகள் என தெரியும். பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வருவது குறித்து ஜி.எஸ்.டி கவுன்சில் முடிவு செய்ய வேண்டும். 

பெட்ரோல், டீசல் விலை நிர்ணய முறையில் மத்திய அரசு மாற்றம் கொண்டுவர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com