கருணாநிதி பற்றி பேசியதற்கு விளக்கமளித்து விட்டேன்: அமைச்சர் கடம்பூர் ராஜூ

கருணாநிதி பற்றி பேசியதற்கு ஏற்கெனவே விளக்கமளித்து விட்டேன் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். 
கருணாநிதி பற்றி பேசியதற்கு விளக்கமளித்து விட்டேன்: அமைச்சர் கடம்பூர் ராஜூ

கருணாநிதி பற்றி பேசியதற்கு ஏற்கெனவே விளக்கமளித்து விட்டேன் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சா் கடம்பூா் ராஜூ பேசும்போது, மெரீனாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க உயா்நீதிமன்றறம் உத்தரவிட்டபோது, மேல்முறையீடு செய்யாமல் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டோம். அரசு மரியாதையுடன் அவரது உடலை அடக்கம் செய்தது, அதிமுக போட்ட பிச்சை என்று பேசினார். 

அமைச்சரின் இந்த பேச்சு திமுகவினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.  மேலும் பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டன குரல்களும் எழுந்தன. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பிச்சை என்பதை ஏற்க முடியாது என்றார். ஆட்சியே மக்கள் போட்ட பிச்சை தான். அமைச்சர் இவ்வாறு கூறியதை ஏற்க முடியாது என அவர் கூறினார். இந்நிலையில் தூத்துக்குடியில் நேற்று நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, கருணாநிதி பற்றி பேசியது தவறு தான் என வருத்தம் தெரிவித்தார். 

இதனிடையே இன்று சென்னை விமான நிலையம் வந்த அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர், கருணாநிதி பற்றி பேசியதற்கு விளக்கமளித்து விட்டேன். ஜெயலலிதாவின் சமாதியை இடிப்போம் என கூறிய ஆ.ராசாவுக்குதான் தூத்துக்குடி கூட்டத்தில் பதில் அளித்தேன். சட்டப்பேரவையில் எம்ஜிஆர், ஜெயலலிதாவை அவதூறாக பேசியவர்கள்தான் திமுகவினர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com