பிரியாணி கடை முதல் அழகுநிலையம் வரை தாக்குதல் நடத்துவது திமுகவினர்தான் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
காங்கிரஸ் ஆட்சியில் கூட்டணியில் இருந்த திமுக தமிழகத்திற்கு என்ன திட்டங்களை கொண்டுவந்தது. தமிழகத்தில் வன்முறையில் ஈடுபடுவது திமுகவினர்தான்.
பிரியாணி கடை முதல் அழகுநிலையம் வரை தாக்குதல் நடத்துவது திமுகவினர்தான். பலமில்லாத கட்சி என கருதினால் பாஜகவை கண்டு அச்சப்படுவது ஏன்?. தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி பிறகட்சியினரை எரிச்சல் அடையச் செய்திருக்கிறது.
சிறையில் தவறு நடைபெறவில்லையென்றால் ஏன் சிறைத்துறை அதிகாரிகள் மாற்றப்பட்டனர். பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர மாநில அரசுகள் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.