சென்னை: சென்னையில் பெரியாா் சிலை அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்குரைஞரை, குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன் உத்தரவிட்டாா்.
தந்தை பெரியாரின் 140வது பிறறந்தநாளையொட்டி, சென்னை அண்ணா சாலை சிம்சன் சிக்னல் அருகே உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக அரசியல் கட்சியினா் திங்கள்கிழமை அங்கு திரண்டிருந்தனா். அப்போது அங்கு மோட்டாா் சைக்கிளில் வந்த, த.ஜெகதீசன் (33) திடீரென தான் அணிந்திருந்த காலணியை பெரியாா் சிலை மீது வீசினாா்.
இதைப் பாா்த்த அங்கிருந்த விடுதலை சிறுத்தை கட்சியினா், ஜெகதீசனை கையும்களவுமாக பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். சிந்தாதிரிப்பேட்டை போலீஸாா் ஜெகதீசன் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனா்.
இதற்கிடையே, ஜெகதீசனை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய சிந்தாதிரிப்பேட்டை போலீஸாா், காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதனிடம் பரிந்துரை செய்தனா். அந்த பரிந்துரையின்படி, ஜெகதீசனை அச்சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆணையா் விசுவநாதன் புதன்கிழமை உத்தரவிட்டாா்.
இதையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜெகதீசனுக்கு குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான நகலை போலீஸாா் வழங்கினா்.