தமிழகத்தில் 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் புதன்கிழமை பிறப்பித்தார்.
மாற்றப்பட்டவர்கள் விவரம்: (அதிகாரிகள் முன்பு வகித்த அடைப்புக் குறிக்குள்)
ரீட்டா ஹரீஸ் தாக்கர்: சர்க்கரைத் துறை ஆணையாளர் (தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர்)-- தமிழ்நாடு சர்க்கரை கழகத்தின் நிர்வாக இயக்குநராகவும் ரீட்டா ஹரீஸ் செயல்படுவார்.
ஜெ. விஜயராணி: வேளாண்மைத் துறை கூடுதல் இயக்குநர் (நில நிர்வாக இணை ஆணையாளர்)
கே.கற்பகம்: நில நிர்வாக இணை ஆணையாளர் (தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்)
பிங்கி ஜோவல்: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் செயலாளர் (சுற்றுலா, கலை மற்றும் இந்து சமய அறநிலையங்கள் துறை கூடுதல் செயலாளர்)
எம்.பாலாஜி: டெல்டா மாவட்டங்களில் நீர்ப்பாசன திட்ட கூடுதல் செயலாளர் (வணிக வரித்துறையில் பெரு வரிகளைச் செலுத்தும் பிரிவின் கூடுதல் ஆணையாளர்)
ஜெ.மேகநாத ரெட்டி: வணிக வரி பெரு வரிகளைச் செலுத்தும் பிரிவின் கூடுதல் ஆணையாளர் (நில நிர்வாக கூடுதல் ஆணையாளர்)
டி.ஜெகந்நாதன்: சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கான ஆணையாளர் (தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் சேவைகள் கழகத்தின் நிர்வாக இயக்குநர்)
அதுல் ஆனந்த்: பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை ஆணையாளர் (சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கான ஆணையாளர்)
குமரவேல் பாண்டியன்: பெருநகர சென்னை மாநகராட்சியின் துணை ஆணையாளர்-கல்வி (வேளாண்மைத் துறை கூடுதல் இயக்குநர்)
என்.வெங்கடாசலம்: தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் சேவைகள் கழகத்தின் நிர்வாக இயக்குநர் (பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை இயக்குநர்)
கூடுதல் பொறுப்பு: சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் தலைமை நிர்வாக அலுவலராக உள்ள எம்.மதிவாணன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை இயக்குநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று தனது உத்தரவில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.