அதிமுக சார்பில் 25-இல் கண்டன பொதுக் கூட்டம்

திமுக-காங்கிரஸ் கட்சிகளைக் கண்டித்து அதிமுக சார்பில் வரும் 25-இல் நடைபெறும் பொதுக் கூட்டங்களுக்கான இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

திமுக-காங்கிரஸ் கட்சிகளைக் கண்டித்து அதிமுக சார்பில் வரும் 25-இல் நடைபெறும் பொதுக் கூட்டங்களுக்கான இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
முதல்வர் பழனிசாமி சேலத்திலும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேனியிலும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர். 
ஒவ்வொரு அமைச்சரும் தங்களது சொந்த மாவட்டங்களில் நடைபெறும் கூட்டங்களில் உரையாற்ற உள்ளனர்.
இலங்கைத் தமிழர் பிரச்னையில், அங்குள்ள தமிழர்கள் கொல்லப்பட திமுக-காங்கிரஸ் கட்சிகளே காரணம் எனவும், அதற்கு கண்டனம் தெரிவித்து கூட்டங்கள் நடத்தப்படும் எனவும் அதிமுக அறிவித்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com