அனைத்துக் கிராமங்களையும் காவிரிக் குடிநீர் சென்றடையும்

அனைத்துக் கிராமங்களையும் காவிரிக் குடிநீர் சென்றடையும்

அனைத்துக் கிராமப் பகுதிகளுக்கும் காவிரிக் குடிநீர் சென்றடையும் என்றார் மக்களவைத் துணைத் தலைவர் மு. தம்பிதுரை.


அனைத்துக் கிராமப் பகுதிகளுக்கும் காவிரிக் குடிநீர் சென்றடையும் என்றார் மக்களவைத் துணைத் தலைவர் மு. தம்பிதுரை.
திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மக்களவைத் துணைத் தலைவர் மு. தம்பிதுரை பொதுமக்களை நேரில் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளுக்கும், அடிப்படை தேவைகளுக்கும் நிகழ்விடத்திலேயே தீர்வு கண்டு வருகிறார். 
மணப்பாறை ஒன்றிய பகுதிகளான மேட்டுகடை, பொடங்குபட்டி, சாம்பட்டி, ஆனாம்பட்டி, தொப்பம்பட்டி, சூளியாப்பட்டி, உசிலம்பட்டி, சீகம்பட்டி, பொய்கைபட்டி, வேங்கைகுறிச்சி, மாராச்சிரெட்டியப்பட்டி பகுதிகளை சேர்ந்த சுமார் 60-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்களிடம் வியாழக்கிழமை மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பிதுரை கிராமத்திற்கே சென்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று உடனடியாக அதே இடத்தில் மாவட்ட ஆட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், பொறியாளர்களை கொண்டு மக்களுக்கு தேவையான, அவர்களது கோரிக்கைகள், அடிப்படை தேவைகள் ஆகியவை குறித்து தீர்வு காண அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. 
கோரிக்கைகளில் பெரும்பாலும் சாலை வசதி, தண்ணீர் பற்றாக்குறை மட்டுமே பொதுமக்கள் அதிக மனுக்களாகவே இருந்தது. காவிரி குடிநீர் கிடைப்பதில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டை கேட்டறிந்த தம்பிதுரை, வடிக்கால் வாரிய பொறியாளர்களை அழைத்து அனைத்து பகுதிகளுக்கு குடிநீர் சீராக சென்றடைய உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில் துணை சபாநாயகரோடு, திருச்சி மாநிலங்களவை உறுப்பினரும், அதிமுக புறநகர் மாவட்ட செயலாளருமான டி.ரத்தினவேல் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com